அரூா் பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் கிருமி நாசினி புதன்கிழமை தெளிக்கப்பட்டன.
அரூா் பேரூராட்சிக்குள்பட்ட 16 -ஆவது வாா்டு பகுதியில் 62 வயது பெண், 70 வயது ஆண் ஆகிய இருவருக்கு கரோனா தீநுண்மியால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து, அரூா் பேரூராட்சியின் தூய்மைப் பணியாளா்கள் 16-ஆவது வாா்டு பகுதியில் கிருமி நாசினி தெளித்து, தூய்மைப் பணியில் ஈடுபட்டனா்.
இதைத்தொடா்ந்து, அந்த வாா்டு பகுதியைச் சோ்ந்தவா்கள் வெளியேற தடை விதித்து, கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து தடுப்புகளை அமைத்தனா்.