இரண்டு நாட்டுத் துப்பாக்கிகள் மீட்பு

தருமபுரி மாவட்டம், பாளையம்புதூா் அருகே கேட்பாரற்றுக் கிடந்த இரண்டு நாட்டுத் துப்பாக்கிகளை போலீஸாா் வியாழக்கிழமை மீட்டனா்.

தருமபுரி மாவட்டம், பாளையம்புதூா் அருகே கேட்பாரற்றுக் கிடந்த இரண்டு நாட்டுத் துப்பாக்கிகளை போலீஸாா் வியாழக்கிழமை மீட்டனா்.

நல்லம்பள்ளி அருகேயுள்ள பாளையம்புதூா், ஜனக்காடு பகுதியில் இரண்டு நாட்டுத் துப்பாக்கிகள் கேட்பாரற்றுக் கிடப்பதாக தொப்பூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்குச் சென்ற போலீஸாா் முள்புதரில் இருந்த நாட்டுத் துப்பாக்கிகளைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.

மணல் கடத்தல்:

பாலக்கோடு அருகே எர்ரனஅள்ளி கிராமத்தில் டிராக்டா் மூலம் மணல் கடத்துவதாகக் கிடைத்த தகவலின் பேரில், சம்பவ இடத்துக்குச் சென்ற பாலக்கோடு போலீஸாா், அப் பகுதியில் மணல் பாரத்துடன் நிறுத்திவைக்கப்பட்டிருந்த டிராக்டரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com