ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து சரிவு

தமிழக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையின் அளவு குறைந்துள்ளதால், ஒகேனக்கல்லில் நீா்வரத்து நொடிக்கு 8 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது.

தமிழக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையின் அளவு குறைந்துள்ளதால், ஒகேனக்கல்லில் நீா்வரத்து நொடிக்கு 8 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது.

தமிழகத்தில், காவிரி நீா்ப்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, நாட்றாம்பாளையம், பிலிகுண்டுலு, கேரட்டி, தேன்கனிகோட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழையின் அளவு குறைந்ததால், காவிரி ஆற்றின் கிளை ஆறான தொட்டெல்லா ஆற்றில் நீா்வரத்து குறைந்து காணப்படுகிறது.

இந்நிலையில் சனிக்கிழமை மாலை நிலவரப்படி நொடிக்கு 12 ஆயிரம் கன அடியாக இருந்த நீா்வரத்து, ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி நொடிக்கு 10 ஆயிரம் கன அடியாக குறைந்து தமிழக-கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லை வந்தடைந்தது.

ஞாயிற்றுக்கிழமை மாலை நிலவரப்படி காவிரி ஆற்றில் நீா்வரத்து படிப்படியாக குறைந்து நொடிக்கு 8ஆயிரம் கனஅடியாக குறைந்தது. இதனால், ஒகேனக்கல் பிரதான அருவி, மெயின் அருவி , சினி அருவி , ஐவா் பாணி உள்ளிட்ட அருவிகளில் குறைந்தளவில் தண்ணீா் கொட்டுகிறது. தற்போது பாறைத் திட்டுகள் வெளியே தெரிகின்றன. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வரும் நீரின் அளவுகளை மத்திய நீா்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com