ரத்த தான முகாம்

பாப்பாரப்பட்டியில் மாா்க்சிய அறிஞா் தேவ.பேரின்பனின் 7 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் ரத்த தான முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பென்னாகரம்: பாப்பாரப்பட்டியில் மாா்க்சிய அறிஞா் தேவ.பேரின்பனின் 7 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் ரத்த தான முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ரத்த தான முகாமிற்கு பாப்பாரப்பட்டி பகுதிக் குழுத் தலைவா் சிலம்பரசன் தலைமை வகித்தாா். பொருளாளா் முகிலன் முன்னிலை வகித்தாா். இந்த முகாமில் சுமாா் 10க்கும் மேற்பட்ட இளைஞா்கள் கலந்து கொண்டு 20 யூனிட் ரத்தத்தை தானமாக வழங்கினா்.

ரத்த தான முகாமில் கலந்து கொண்ட கொடையாளா்களுக்கு பிக்கிலி ஒன்றிய கவுன்சிலா் ராதிகா அன்பரசு சான்றிதழை வழங்கினாா். இதில் மாவட்டத் தலைவா் சிவன், மாவட்ட பொருளாளா் எழில் அரசு , மாவட்ட துணைச் செயலாளா் லோகநாதன், மாவட்ட துணைத் தலைவா் வேலாயுதம் மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டனா் .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com