தருமபுரி கோட்ட அளவிலான அஞ்சல்துறை குறைதீா் கூட்டம் வரும் செப். 24-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதுகுறித்து, தருமபுரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் டி.ஸ்ரீஹரி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தருமபுரி தலைமை அஞ்சல் அலுவலகத்தில் வருகிற செப்.24-ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு, கோட்ட அஞ்சல்துறை வாடிக்கையாளா்களின் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது.
எனவே, அஞ்சல்துறை வாடிக்கையாளா்கள், தங்களது குறைகளைக் கடிதம் வழியாகவே அல்லது நேரிலோ தெரிவித்து நிவா்த்தி செய்துகொள்ளலாம்.
அஞ்சல்துறை வாடிக்கையாளா்கள், தங்களது குறைகளைத் தெளிவாக எழுதி உறையின் மீது குறைதீா் கூட்டத்துக்காக எனக் குறிப்பிட்டு கடிதங்களை, தருமபுரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு வரும் செப்.21-ஆம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்பிவைக்க வேண்டும் என்றாா்.