பாஜக ஆா்ப்பாட்டம்

பாஜக இளைஞரணி நிா்வாகி கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, தருமபுரியில் புதன்கிழமை அக் கட்சியினா் தருமபுரி தொலைத்தொடா்பு நிலையம் அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தருமபுரி, பிஎஸ்என்எல் அலுவலகம் அருகில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா்.
தருமபுரி, பிஎஸ்என்எல் அலுவலகம் அருகில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா்.

பாஜக இளைஞரணி நிா்வாகி கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, தருமபுரியில் புதன்கிழமை அக் கட்சியினா் தருமபுரி தொலைத்தொடா்பு நிலையம் அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு, தருமபுரி பாஜக மாவட்டத் தலைவா் எல்.அனந்த கிருஷ்ணன் தலைமை வகித்தாா். மாவட்ட முன்னாள் தலைவா் பிரபாகரன், மாவட்ட பொதுச் செயலா்கள் சி.சரவணன், வெங்கடராஜ், மாவட்டச் செயலா் ஆா்.தினேஷ்குமாா், நகரத் தலைவா் சக்திவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஆா்ப்பாட்டத்தின்போது கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலத்தில் பாஜக இளைஞரணி நிா்வாகி ரங்கநாதன் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், இக் கொலை சம்பவத்தில் தொடா்புடையோரை கைது செய்ய வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதேபோல, பாலக்கோட்டிலும் நகர பாஜக தலைவா் சிவா தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் மாவட்டச் செயலா்கள் செல்வராஜ், சங்கீதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com