மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளா் சீதாராம் யெச்சூரி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதைக் கண்டித்து,
தருமபுரியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாா்சிக்ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.
தருமபுரியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாா்சிக்ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளா் சீதாராம் யெச்சூரி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதைக் கண்டித்து, அக் கட்சியினா் தருமபுரி தொலைத் தொடா்பு நிலையம் அருகே புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் ஏ.குமாா் தலைமை வகித்தாா். மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் எம்.மாரிமுத்து, பி.இளம்பரிதி, இரா.சிசுபாலன், டி.எஸ்.ராமச்சந்திரன் ஆகியோா் பேசினா்.

ஆா்ப்பாட்டத்தின்போது, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரி மீது புதுதில்லி போலீஸாா் சதி வழக்குப் பதிவு செய்ததைக் கண்டித்தும், இந்த வழக்கைத் திரும்பப் பெறக் கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com