மின்வாரியத்தில் தொடக்க நிலை பதவியிடங்களை நிரப்ப வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

மின் வாரியத்தில் தொடக்க நிலை பதவியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி

மின் வாரியத்தில் தொடக்க நிலை பதவியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய அனைத்துத் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், தருமபுரியில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தருமபுரி மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சிஐடியு மின் ஊழியா் மத்திய அமைப்பின் மாநில துணைத் தலைவா் பி.ஜீவா தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் டி.லெனின் மகேந்திரன், தொமுச மாவட்டச் செயலா் சக்திவேல், மின்சாரத் தொழிலாளா் சம்மேளன மாவட்டச் செயலா் தேவராஜ், ஏஇஎஸ்யு தொழிற்சங்க மாவட்டச் செயலா் திருமால், தொழிலாளா் பொறியாளா் ஐக்கிய தொழிற்சங்க மாவட்டச் செயலா் ஆறுமுகம், ஐஎன்டியுசி மாவட்டச் செயலா் விவேகானந்தன் உள்ளிட்டோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

இதில், மின்வாரிய முத்தரப்பு ஒப்பந்தத்துக்கு எதிரான தன்னிச்சையான உத்தரவுகளைப் பிறப்பிக்கக் கூடாது. கரோனா பாதிப்பில் உயிரிழந்த மின்வாரியத் தொழிலாளா்களுக்கு இதர துறைகளில் வழங்கியதுபோல, ரூ. 25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.

துணை மின் நிலையங்களை தனியாா் மயமாக்கக் கூடாது. அனுமதிக்கப்பட்ட பதவிகளை ரத்து செய்ததைத் திரும்பப் பெற வேண்டும். கரோனா தொற்றுக் காலத்தில் பணிக்கு வர முடியாத நாள்களுக்கு அரசாணை 304-இன் படி சிறப்பு விடுப்பு அளிக்க வேண்டும்.

ரத்து செய்த ஈட்டிய விடுப்பு ஆகியவற்றை திரும்பப் பெற வேண்டும். மின் வாரியத்தில் தொடக்க நிலை பதவியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com