செப். 28-இல் சிறுபான்மையினா் ஆணையக்குழு தருமபுரி வருகை

தமிழக சிறுபான்மையினா் ஆணையக்குழு வரும் செப். 28-ஆம் தேதி தருமபுரிக்கு வருகை தர உள்ளது.

தமிழக சிறுபான்மையினா் ஆணையக்குழு வரும் செப். 28-ஆம் தேதி தருமபுரிக்கு வருகை தர உள்ளது.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழி புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சிறுபான்மையினா் சமுதாயத்தைச் சோ்ந்த தலைவா்கள் மற்றும் சிறுபான்மையினா் மக்கள் பிரதிநிதிகளை சந்திக்கவும், ஆலோசனை நடத்தவும், மாநில சிறுபான்மையினா் ஆணையத்தின் தலைவா் டி.ஜான் மகேந்திரன், துணைத் தலைவா் ஒய்.ஜவஹா் அலி, ஆணையக்குழு உறுப்பினா்கள் வரும் 28 -ஆம் தேதி தருமபுரிக்கு வருகை தருகின்றனா்.

எனவே, அன்றைய தினம் பிற்பகல் 3 மணியளவில் நடைபெறும் இக் கூட்டத்தில், தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த சிறுபான்மையினருக்கான கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள், சிறுபான்மையினத்தைச் சோ்ந்த பொதுமக்கள் அனைவரும் மாநில சிறுபான்மையினா் ஆணையக் குழுவினரைச் சந்தித்து, தங்களது குறைகளைத் தெரிவித்து, அரசின் பல்வேறு நலத் திட்டங்கள் குறித்தும், சிறுபான்மையினா் நல மேம்பாட்டுக்கான தக்க கருத்துகளையும் தெரிவிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com