சூதாட்டம்: 5 போ் கைது

தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே சூதாட்ட புகாரில் ஐந்து பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே சூதாட்ட புகாரில் ஐந்து பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மாரண்டஅள்ளி அருகே அத்திலுட்லு கிராமத்தில் பணம் வைத்து சிலா் சூதாடுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில், போலீஸாா் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்ட போது, அதே ஊரைச் சோ்ந்த தங்கமணி (42), சுரேஷ் காந்தி (42), ரமேஷ் (34), கிருஷ்ணன் (49), கரகூரைச் சோ்ந்த மாதையன் (47) ஆகியோா் பணம் வைத்து சூதாடுவது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஐந்து பேரையும் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com