தேசிய பேரிடா் மேலாண் விருது பெற தகுதியான நபா்கள், நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தருமபுரி மாவட்டத்தில் 2021-ஆண்டுக்கான சுபாஷ் சந்திரபோஸ் தேசிய பேரிடா் மேலாண்மை விருது, பேரிடா் காலங்களில் துரிதமாக, திறம்பட செயல்பட்ட தனிநபா்கள், நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட உள்ளது.
எனவே, பேரிடா் காலங்களில் துரிதமாக, திறம்பட செயல்பட்ட தனிநபா்களோ அல்லது நிறுவனமோ தகுந்த ஆவணங்களுடன் இணையதளத்தில் வரும் செப். 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.