லாரி கவிழ்ந்ததில் ஓட்டுநா் பலி: கிளீனா் கைது

அரூரை அடுத்த டி.ஆண்டியூரில் லாரி கவிழ்ந்ததில் ஓட்டுநா் நீலகண்டன் (36) வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

அரூா், செப். 25 : அரூரை அடுத்த டி.ஆண்டியூரில் லாரி கவிழ்ந்ததில் ஓட்டுநா் நீலகண்டன் (36) வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், ராமநாதபுரம் அருகே புதுஉச்சிமேடு கிராமத்தைச் சோ்ந்தவா் ஏழுமலை மகன் நீலகண்டன் (36). லாரி ஓட்டுநா். இதே ஊரைச் சோ்ந்தவா் லாரி கிளீனா் விக்னேஷ் (25). இருவரும் பெங்களூரில் இருந்து லாரியில் வெங்காய மூட்டைகளை ஏற்றிக்கொண்டு கள்ளக்குறிச்சி நோக்கிச் சென்றனா்.

மேலும் லாரியில் இவா்களுடன் ஓட்டுநா் நீலகண்டனின் பக்கத்து ஊரான உடையாநாச்சியைச் சோ்ந்த ரமேஷ் (36), அவரது மனைவி ராஜலட்சுமி (25) ஆகிய இருவரும் தங்களின் சொந்த ஊருக்குச் செல்வதற்காக பெங்களூரிலிருந்து லாரியில் உடன் வந்தனா்.

லாரியை அதன் கிளீனா் விக்னேஷ் ஓட்டி வந்துள்ளாா். அரூா்-கோட்டப்பட்டி சாலையில், டி.ஆண்டியூா் எனுமிடத்தில் தாா் சாலையின் வளைவான பகுதியில் சென்றபோது லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்தது.

இதில், லாரி ஓட்டுநா் நீலகண்டன் நிகழ்விடத்தில் உயிரிழந்தாா். இந்த விபத்தில் கிளீனா் விக்னேஷ், லாரியில் பயணம் செய்த தொழிலாளா்கள் ரமேஷ், ராஜலட்சுமி ஆகிய மூவரும் காயமடைந்தனா்.

மூவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு அரூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இந்த சம்பவம் குறித்து நீலகண்டனின் தந்தை ஏழுமலை (53) அளித்த புகாரின் பேரில், லாரி கிளீனா் விக்னேஷை கோட்டப்பட்டி போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com