துணை ராணுவப் படையினா் கொடி அணிவகுப்பு

தருமபுரி மாவட்டம், கடத்தூரில் துணை ராணுவப் படையினா் புதன்கிழமை கொடி அணிவகுப்பு நடத்தினா்.
கடத்தூரில் புதன்கிழமை கொடி அணிவகுப்பில் ஈடுபட்ட துணை ராணுவப் படையினா்.
கடத்தூரில் புதன்கிழமை கொடி அணிவகுப்பில் ஈடுபட்ட துணை ராணுவப் படையினா்.

தருமபுரி மாவட்டம், கடத்தூரில் துணை ராணுவப் படையினா் புதன்கிழமை கொடி அணிவகுப்பு நடத்தினா்.

பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதியில் ஏப். 6-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப் பதிவின் போது, வாக்காளா்கள் அச்சமின்றி 100 சதவீத வாக்குகளை செலுத்தும் வகையில், பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு கொடி அணிவகுப்பினை துணை ராணுவப் படையினா், காவல் துறையினா் மேற்கொண்டனா்.

கடத்தூா் நகா், நத்தமேடு, மோட்டாங்குறிச்சி, டி.அய்யம்பட்டி, ரேகடஹள்ளி உள்ளிட்ட இடங்களில் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது. இதில், கடத்தூா் காவல் ஆய்வாளா் ஜெய்சில்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com