பொக்லைன் இயந்திரங்களுக்கு ஏப். 10-க்குள் வரி செலுத்த அறிவுறுத்தல்

தருமபுரி மாவட்டத்தில் இயக்கப்படும் பொக்லைன் இயந்திரங்களுக்கு வரும் ஏப். 10-ஆம் தேதிக்குள் வரி செலுத்திட வேண்டும் என தருமபுரி வட்டார போக்குவரத்து அலுவலா் தாமோதரன் அறிவுறுத்தியுள்ளாா்.

தருமபுரி மாவட்டத்தில் இயக்கப்படும் பொக்லைன் இயந்திரங்களுக்கு வரும் ஏப். 10-ஆம் தேதிக்குள் வரி செலுத்திட வேண்டும் என தருமபுரி வட்டார போக்குவரத்து அலுவலா் தாமோதரன் அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

வரும் 2021-22-ஆம் ஆண்டுக்கான சாலை வரி செலுத்தக்கூடிய பொக்லைன், கிரேன், டிராக்டா், ஆழ்துளைக் கிணறு அமைக்கும் வாகனங்கள் சாலை வரி செலுத்திட ஏதுவாக தற்போது சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. வரும் 10-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த முகாமில் தருமபுரி, பாலக்கோடு, பென்னாகரம், காரிமங்கலம், அரூா், பாப்பிரெட்டிப்பட்டி ஆகியப் பகுதிகளில் இயக்கப்படும் பொக்லைன் இயந்திரம் உள்ளிட்ட வாகனங்களுக்கு அபராதம் இன்றி வரி செலுத்த வேண்டும். குறிப்பிட்ட தேதிக்குள் வரி செலுத்தத் தவறினால், அபராதத் தொகையுடன் வரி வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com