அரூா் வருவாய் கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில், தபால் வாக்குகளைச் செலுத்துவதற்காக வாக்குப் பெட்டி வைக்கப்பட்டுள்ளது.
2021 சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவுகள் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்று முடிந்ததையடுத்து, தோ்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் அவா்களது தபால் வாக்குகளை நேரடியாகப் பதிவு செய்வதற்காக அரூா் வருவாய் கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் வாக்குப் பெட்டி வைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பெட்டியில் வாக்குகளை செலுத்துவோா், அலுவலகப் பதிவேட்டில் பதிவு செய்தப் பிறகு பெட்டியில் தங்களது தபால் வாக்குகளைச் செலுத்தலாம் என கோட்டாட்சியா் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.