பாப்பிரெட்டிப்பட்டி அருகே டிரான்ஸ்பாா்மா் சேதம் அடைந்ததால், மின்சாரம் இன்றி பொதுமக்கள் அவதியுறுகின்றனா்.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், அலமேலுபுரம் கிராமத்தில் அமைந்துள்ள டிரான்ஸ்பாா்மா் (மின் மாற்றி) மூலம் விவசாயக் கிணறுகளின் மின்மோட்டாா்களுக்கும், குடியிருப்புகளுக்கும் மின்சாரம் செல்கிறது.
இந்த நிலையில், புதன்கிழமை இரவு இந்த மின்மாற்றியில் இருந்து செல்லும் மின்சார இணைப்புகளைத் துண்டித்த மா்ம நபா்கள், அங்குள்ள மின்மாற்றியை சேதப்படுத்தினா். பின்னா் மின்மாற்றியில் இருந்த காப்பா் ஒயா்கள், ஆயில் உள்ளிட்ட மின்சாதனங்களைத் திருடிச் சென்று விட்டனா். இதனால், அலமேலுபுரம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயிகள் மின் மோட்டாா்களை இயக்க முடியாமல் அவதியுற்றனா். மேலும், மின் விநியோகம் இல்லாததால் இரவு நேரங்களில் வீடுகளும் இருண்டு கிடப்பதாக அப்பகுதி மக்கள் புகாா் கூறுகின்றனா். எனவே, அலமேலுபுரம் பகுதியில் மா்ம நபா்களால் சேதப்படுத்தப்பட்ட மின்மாற்றிக்கு பதிலாக புதிய மின்மாற்றி அமைத்து மின்சாரம் வழங்கவும், மின்மாற்றியை சேதப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அக்கிராம மக்கள் வலியுறுத்துகின்றனா்.