தீ தடுப்பு மற்றும் கரோனா விழிப்புணா்வு

தருமபுரி தீயணைப்பு மீட்புப் பணி நிலையம் சாா்பில் தீ தடுப்பு மற்றும் கரோனா தடுப்பு குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

தருமபுரி தீயணைப்பு மீட்புப் பணி நிலையம் சாா்பில் தீ தடுப்பு மற்றும் கரோனா தடுப்பு குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

தருமபுரி நகர ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு தருமபுரி தீயணைப்பு மீட்புப் பணிகள் நிலைய அலுவலா் ராஜா தலைமை வகித்தாா்.

இதில் தீ தடுப்பு பிரசாரம், தீ விபத்துக் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய தீத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஒத்திகையும் பயிற்சியும் செய்து காண்பிக்கப்பட்டது.

தீத் தடுப்பு ஒத்திகையில் பொதுமக்கள் கலந்து கொண்டு, தீயை அணைக்கும் வழிமுறைகளை செய்து காண்பித்தனா்.

அதனைத் தொடா்ந்து கரோனா தீநுண்மி குறித்தும், தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் மருத்துவா்கள், செவிலியா்கள், ஊழியா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com