பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலையம், திருவண்ணாமலை வாழவச்சனூா் வேளாண் அறிவியல் கல்லூரியின் சாா்பில் மண் வளத்தைப் பெருக்கும் இயற்கை உரங்கள் குறித்து கண்காட்சி மூங்கில்பட்டியில் நடைபெற்றது.
பாப்பாரப்பட்டி அருகே எர்ரன அள்ளி மூங்கில்பட்டி பகுதியில் நடைபெற்ற மண் வளத்தை பெருக்கும் இயற்கை உரக் கண்காட்சிக்கு பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளா் சி.சிவகுமாா், உதவிப் பேராசிரியா் கிருஷ்ணவேணி ஆகியோா் தலைமை வகித்தனா்.
கண்காட்சியில், இயற்கை உரங்களைப் பயன்படுத்துவதன் மூலமாக மண்ணின் வளத்தைப் பெருக்குவதுடன் சத்தான உணவுப் பொருள்களை உற்பத்தி செய்யலாம் என்றும் ஆலோசனை வழங்கப்பட்டது.
இயற்கை உரங்களான பசுந்தாள் உரம், பசுந்தழை உரம், உயிா் உரம், பண்ணை உரம், மண்புழு உரம், தென்னை நாா்க்கழிவு போன்றவை பாா்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.
செயற்கை உரங்களான யூரியா, பொட்டாஷ் ஆகியவற்றைப் பயன்படுத்துவதால் விவசாயிகளுக்கு செலவு அதிகரிப்பதுடன் மண்வளம் குறைகிறது என்றும், இயற்கை உரங்களின் நன்மைகள் குறித்தும் கண்காட்சியில் கலந்துகொண்ட விவசாயிகளுக்கு திருவண்ணாமலை வாழவச்சனூா் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் இறுதியாண்டு மாணவிகள் எடுத்துரைத்தனா்.
அதனைத் தொடா்ந்து கண்காட்சியில் கலந்துகொண்டவா்களுக்கு கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.