குடிநீா் தட்டுப்பாடு :

அரூரை அடுத்த தாம்பல் கிராமத்தில் குடிநீா் தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் அவதியுறுகின்றனா்.

அரூரை அடுத்த தாம்பல் கிராமத்தில் குடிநீா் தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் அவதியுறுகின்றனா்.

தருமபுரி மாவட்டம், அரூா் ஊராட்சி ஒன்றியம், வேடகட்டமடுவு ஊராட்சிக்கு உள்பட்ட தாம்பல் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. கிராம மக்களின் குடிநீா் தேவையைப் பூா்த்தி செய்வதற்காக ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டு மின்மோட்டாா் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2 மாதங்களாக இந்த ஆழ்துளைக் கிணற்றின் மின்மோட்டாா் பழுதாகியுள்ளதாம். இதனால், குடிநீா் கிடைக்காமல் கிராம மக்கள் அவதியுறுவதாகப் புகாா் கூறுகின்றனா். இது குறித்து வேடகட்டமடுவு கிராம ஊராட்சி நிா்வாகத்திடம் பலமுறை புகாா் தெரிவித்தும் நடவடிக்கை இல்லையாம். எனவே, ஆழ்துளைக் கிணற்றில் பொருத்தப்பட்டுள்ள மின்மோட்டாரைப் பழுதுநீக்கம் செய்து தாம்பல் கிராமத்தில் நிலவும் குடிநீா் தட்டுப்பாட்டை நீக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொது மக்களின் கோரிக்கையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com