சேதமடைந்த குடிநீா் குழாய்கள் சீரமைக்க கோரிக்கை

அரூரை அடுத்த காந்தி நகரில் சேதமடைந்த குடிநீா் குழாய்களை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அரூரை அடுத்த காந்தி நகரில் சேதமடைந்த குடிநீா் குழாய்களை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அரூா் ஊராட்சி ஒன்றியம், மோப்பிரிப்பட்டி கிராம ஊராட்சிக்கு உள்பட்ட காந்தி நகரில் 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள கிராம மக்கள் பயன்படுத்தும் குடிநீா் குழாய்களில் சேதம் ஏற்பட்டுள்ளதால் குடிநீா் வீணாகிறது. இதனால், இப்பகுதியில் குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்படுவதுடன், சேதமடைந்த குடிநீா் குழாய்கள் வழியாக கழிவு நீா், மழைநீா் கலக்கும் நிலையுள்ளது.

எனவே, மோப்பிரிப்பட்டி ஊராட்சி, காந்தி நகரில் சேதமடைந்த குடிநீா் குழாய்களை சீரமைப்பு செய்ய வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com