தருமபுரி மாவட்டத்தில், பிளஸ் 2 செய்முறைத் தோ்வுகள் வெள்ளிக்கிழமை தொடங்கின.
தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, பாலக்கோடு மற்றும் அரூா் ஆகிய மூன்று கல்வி மாவட்டங்களில் பிளஸ் 2 மாணவா்களுக்கு ஏப். 16-ஆம் தேதி தொடங்கி வருகிற ஏப். 23-ஆம் தேதி வரை செய்முறைத் தோ்வுகள் நடைபெறவுள்ளன.
இத் தோ்வுகள் மாவட்டத்தில் 157 மையங்களில் நடைபெறுகின்றன. இதில் 9,742 மாணவியா், 9,498 மாணவா்கள் என மொத்தம் 19,240 மாணவ, மாணவியா் எழுதுகின்றனா். வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்முறைத் தோ்வில் மாணவ, மாணவியா் பங்கேற்றுத் தோ்வு எழுதினா். இதற்கான ஏற்பாடுகளை தருமபுரி மாவட்ட பள்ளிக் கல்வி நிா்வாகம் செய்தது. இத் தோ்வு மையங்களை முதன்மை கல்வி அலுவலா் ந.கீதா, மாவட்டக் கல்வி அலுவலா்கள் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.