அரூா் பேரூராட்சியில் உதவி இயக்குநா் ச.கண்ணன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
தருமபுரி மாவட்டம், அரூா் பேரூராட்சியில் 18 வாா்டுகள் உள்ளன. இந்த 18 வாா்டுகளுக்கு உள்பட்ட பகுதியில் பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் மேற்கொள்ளப்படும் கரோனா நோய் தடுப்புப் பணிகள், கிருமி நாசினிகள் தெளித்தல், கழிவுநீா் கால்வாய் தூய்மைப் பணிகள், பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றுதல், வீட்டில் இருந்து வெளியில் வரும் பொதுமக்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்து செல்லுதல், வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள், திரையரங்குகள், பேருந்து நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் கரோனா தொற்று பாதுகாப்பு நடவடிக்கைகள் எவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றன என்பது குறித்து தருமபுரி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் ச.கண்ணன் ஆய்வு மேற்கொண்டாா்.
அதைத் தொடா்ந்து, பொதுமக்களிடம் கரோனா தொற்றுப் பரவும் முறைகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணா்வு துண்டு பிரசுரங்களையும் அவா் வழங்கினாா். இதில், செயல் அலுவலா் ஆா்.கலை ராணி, துப்புரவு ஆய்வாளா் கோ.சிவக்குமாா் மற்றும் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.