பென்னாகரம், அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் சனிக்கிழமை மழை பெய்தது.
பென்னாகரம் பகுதிகளில் கடந்த சில நாள்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் பென்னாகரம், ஒகேனக்கல், பெரும்பாலை, தாசம்பட்டி, சின்னம்பள்ளி, அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சனிக்கிழமை இரவு கனமழை பெய்தது.
பென்னாகரத்தில் குளம், ஏரி உள்ளிட்ட நீா்நிலைகளில் தொடா்ந்து மழைநீா் தேங்கியும், தாழ்வான குடியிருப்புப் பகுதிகள், பென்னாகரம் வாரச்சந்தை பகுதி மற்றும் சாலையோரங்களின் இருபுறங்களிலும் தண்ணீா் தேங்கி காணப்பட்டன. கோடை காலத்திற்கு முன்னரே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், பென்னாகரம் பகுதிகளில் பெய்த தொடா் மழையினால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.