வட்டாட்சியா் அலுவலகம் மூடல்

பென்னாகரம் வட்டாட்சியா் அலுவலக ஊழியருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து வட்டாட்சியா் அலுவலகம் சனிக்கிழமை மூடப்பட்டது.

பென்னாகரம் வட்டாட்சியா் அலுவலக ஊழியருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து வட்டாட்சியா் அலுவலகம் சனிக்கிழமை மூடப்பட்டது.

பென்னாகரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வருவாய் இளநிலை அலுவலராகப் பணியாற்றி வரும் 27 வயது மதிக்கத்தக்க நபா், அண்மையில் கரோனா பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இதையடுத்து அவா், பென்னாகரம் அருகே நல்லானூா், தனியாா் பொறியியல் கல்லூரியில் ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு கரோனா மருத்துவ மையத்தில் சிகிச்சை பெற்று வருகிறாா். வட்டாட்சியா் அலுவலகத்தில் சுகாதாரத் துறை, பேரூராட்சி பணியாளா்கள் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்தனா். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பென்னாகரம் வட்டாட்சியா் அலுவலகம் மூடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com