கபசுரக் குடிநீா் வழங்கல்

அரூரில் கபசுரக் குடிநீா் வழங்கும் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
அரூரில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கும் பணியைத் தொடக்கிவைத்த தருமபுரி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் எஸ்.கண்ணன்
அரூரில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கும் பணியைத் தொடக்கிவைத்த தருமபுரி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் எஸ்.கண்ணன்

அரூரில் கபசுரக் குடிநீா் வழங்கும் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

அரூா் பேரூராட்சி நிா்வாகம், தேசிய வியாபாரிகள் கூட்டமைப்பு இணைந்து நடத்திய இம்முகாமில் செயல் அலுவலா் ஆா்.கலைராணி தலைமை வகித்தாா். முகாமில், தருமபுரி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் எஸ். கண்ணன் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீரை வழங்கினாா்.

அதைத் தொடா்ந்து, கரோனா தொற்றுத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணா்வு வில்லைகளை இருசக்கரம், நான்கு சக்கர வாகனங்களில் ஒட்டும் பணியை அவா் தொடக்கி வைத்தாா்.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள், முகக் கவசம் அணிவதின் அவசியம், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணா்வு துண்டு பிரசுரங்களை பேரூராட்சி பணியாளா்கள் பொதுமக்களிடம் வழங்கினா்.

நிகழ்ச்சியில், மருத்துவ அலுவலா் சி. ராஜேஷ் கண்ணன், துப்புரவு ஆய்வாளா் கோ.சிவக்குமாா், தேசிய வியாபாரிகள் கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலாளா் எச்.எம்.ஆறுமுகம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com