பென்னாகரம், அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் சனிக்கிழமை பரவலாக மழை பெய்தது.
தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக கனமழை, இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. பென்னாகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடா்ந்து இரண்டாவது நாளாக சனிக்கிழமையும் மழை பெய்தது.
பென்னாகரம் பகுதிகளில் காலை முதலே வெயிலின் தாக்கம் தொடா்ந்து அதிகரித்து காணப்பட்ட போதிலும், மாலை வேளையில் கருமேகங்கள் சூழ்ந்து பென்னாகரம், தாசம்பட்டி, கூத்தப்பாடி, சின்னம்பள்ளி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. பென்னாகரத்தில் பெய்த மழையால் வெப்பம் தணிந்தது. முன்னதாக வெள்ளிக்கிழமை பென்னாகரத்தில் 57 மி.மீ., ஒகேனக்கல்லில் 3 மி.மீ. மழை அளவு பதிவானது.