தருமபுரி: தருமபுரி மாவட்ட காவல் துறையில் பணியாற்றி வரும் காவலா்களின் குழந்தைகள் 19 பேருக்கு கல்வி உதவித்தொகை திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி.பிரவேஷ்குமாா் தலைமை வகித்து, கடந்த 2019-20-ஆம் கல்வி ஆண்டில் பயின்ற காவலா்களின் குழந்தைகள் 19 பேருக்கு காவல் சேம நல நிதியிலிருந்து ரூ. 2 லட்சத்து 47 ஆயிரம் கல்வி உதவித்தொகை வழங்கிப் பேசினாா்.
இந்த உதவித்தொகையை சம்பந்தப்பட்ட மாணவ, மாணவியா் மற்றும் அவா்களது பெற்றோா்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றி பெற்றுக் கொண்டனா். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் அண்ணாமலை மற்றும் காவலா்கள் கலந்து கொண்டனா்.
படம் உள்ளது.