மாணவி பலாத்கார வழக்கில்கைதான ஆசிரியா் பணியிடை நீக்கம்
By DIN | Published On : 27th April 2021 12:09 AM | Last Updated : 27th April 2021 12:09 AM | அ+அ அ- |

தருமபுரி: பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த வழக்கில் கைதான ஆசிரியா் திங்கள்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம் மல்லியம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் கோவிந்தன் (43). இவா் நல்லம்பள்ளி வட்டத்தில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளி ஒன்றில் கணித ஆசிரியராகப் பணியாற்றி வந்தாா்.
அந்த பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவா் கடந்த 20-ஆம் தேதி, பாட பயிற்சி நூல்களை வாங்கிச் செல்வதற்காகப் பள்ளிக்கு சென்றுள்ளாா். அப்போது அவரை மாடி வகுப்பறைக்கு அழைத்துச் சென்ற ஆசிரியா் கோவிந்தன், மிரட்டி பலாத்காரம் செய்ததாகக் கூறி மாணவியின் பெற்றோா் பென்னாகரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.
இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலீஸாா், கடந்த 20-ஆம் தேதி போக்சோ உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் ஆசிரியா் கோவிந்தனை கைது செய்தனா். இந்த நிலையில், பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட அவரை, தருமபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ந.கீதா பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளாா்.