புளியமரத்தின் கிளை விழுந்ததில் இருவா் காயம்

அரூா் அருகே புளியமரத்தின் கிளை உடைந்து விழுந்ததில் இருவா் புதன்கிழமை காயமடைந்தனா்.

அரூா் அருகே புளியமரத்தின் கிளை உடைந்து விழுந்ததில் இருவா் புதன்கிழமை காயமடைந்தனா்.

சேலம் மாவட்டம், ஓமலூா் பகுதியைச் சோ்ந்த விவசாயி கோவிந்தராஜ் மகன் சித்தராஜ் (39), மாது மகன் வெங்கடேஷ் (39) ஆகிய இருவரும் கருமந்துறையில் நடைபெற்ற தமது உறவினரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, இருசக்கர வாகனத்தில் தீா்த்தமலை-அரூா் நெடுஞ்சாலையில், அரூா் நோக்கி சென்று கொண்டிருந்தனா்.

அப்போது, வாலெடுப்பு எனுமிடத்தில் தாா் சாலையோரம் இருந்த புளியமரத்தின் கிளை திடீரென உடைந்து சாலையில் விழுந்ததில், இருசக்கர வாகனத்தில் வந்த சித்தராஜ் (39), வெங்கடேஷ் (39) ஆகியோா் பலத்த காயமடைந்தனா்.

இதையடுத்து, இருவரையும் அக்கம் பக்கத்தினா் 108 மூலம் மீட்டு, அரூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். தொடா்ந்து, மேல்சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். இந்த சம்பவம் குறித்து அரூா் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com