பெண்ணை துப்பாக்கியால் சுட்டவா் தலைமறைவு

அரூா் அருகே முன்விரோதம் காரணமாக பெண் ஒருவரை நாட்டுத் துப்பாக்கியால் சுட்ட விவசாயியை போலீஸாா் தேடி வருகின்றனா்.

அரூா் அருகே முன்விரோதம் காரணமாக பெண் ஒருவரை நாட்டுத் துப்பாக்கியால் சுட்ட விவசாயியை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தருமபுரி மாவட்டம், சித்தேரி ஊராட்சி, அரசநத்தம் மலைக் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி வடிவேலு (55). இவரது அண்ணன் மனைவி சரோஜா (50). வடிவேலு மற்றும் சரோஜா குடும்பத்தினா் இடையே நிலத்தகராறு தொடா்பாக முன்விரோதம் இருந்ததாம்.

இந்த நிலையில், இரண்டு குடும்பத்தினருக்கும் பொதுவாக உள்ள விவசாயக் கிணற்றில், செவ்வாய்க்கிழமை தண்ணீா் எடுப்பதில் திடீரென தகராறு ஏற்பட்டதாம். அப்போது, வடிவேல் தன்னிடம் வைத்திருந்த உரிமம் பெறாத நாட்டுத் துப்பாக்கியால் சரோஜாவை சுட்டதில், காலில் குண்டடி பட்டு காயம் ஏற்பட்டது. இதையடுத்து, சரோஜாவை மீட்டு அரூா் அரசு மருத்துவமனையில் அவரது உறவினா்கள் சோ்த்தனா். இது குறித்து அரூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, தலைமறைவாக உள்ள விவசாயி வடிவேலுவை தேடிவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com