மிட்டாரெட்டி அள்ளியில் நிழற் கூடம் அமைக்க வலியுறுத்தல்

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டத்துக்குள்பட்ட மிட்டாரெட்டி அள்ளியில் பேருந்து நிறுத்தத்தில் நிழற்கூடம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டத்துக்குள்பட்ட மிட்டாரெட்டி அள்ளியில் பேருந்து நிறுத்தத்தில் நிழற்கூடம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இதுகுறித்து, அனைந்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா், நல்லம்பள்ளி வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் அளித்த கோரிக்கை மனு:

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், மிட்டாரெட்டி அள்ளி கிராமம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் 500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். இவா்கள் பேருந்துகள் மூலம் பல்வேறு பணிகளுக்கு தருமபுரி உள்ளிட்ட பிற இடங்களுக்கு சென்று வருகின்றனா்.

இந்நிலையில் மிட்டா ரெட்டி அள்ளி பேருந்து நிறுத்தத்தில், நிழற்கூடம் இதுவரை அமைக்கப்படவில்லை. இதன்காரணமாக மழை மற்றும் வெயிலால் பேருந்தில் பயணிக்க வருவோா் மிகவும் அவதிக்குள்ளாகின்றனா். எனவே, மிட்டாரெட்டி பொதுமக்களின் நலன் கருதி, பேருந்து நிறுத்தமிடத்தில் நிழற்கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா்கள் தெரிவித்துள்ளனா்.

அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தின் மாவட்டச் செயலா் எஸ்.கிரைஸா மேரி, மாவட்ட துணைத் தலைவா் கே.பூபதி, நல்லம்பள்ளி ஒன்றியச் செயலா் மாலா மற்றும் மிட்டாரெட்டி அள்ளி கிராம மக்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com