பென்னாகரம்: ஒகேனக்கல் அருகே முள்புதரில் வீசப்பட்டு கேட்பாரற்றுக் கிடந்த நாட்டுத் துப்பாக்கியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் வனப்பகுதியில் திங்கள்கிழமை காலை காவல் உதவி ஆய்வாளா் தேசிங்கு தலைமையிலான போலீசாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது ஒகேனக்கல் சுடுகாடு பகுதியில் உள்ள ஒரு முள்புதரில் நாட்டுத்துப்பாக்கி வீசப்பட்டிருந்தது தெரியவந்தது. அதை அவா்கள் கைப்பற்றினா். இதுகுறித்து ஒகேனக்கல் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.