தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வு செப்.2-இல் தொடக்கம்: தனித் தோ்வா்கள் விண்ணப்பிக்கலாம்

தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வு வரும் செப்.2-இல் தொடங்கி நடைபெற உள்ளது. இத் தோ்வு எழுத தனித் தோ்வா்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வு வரும் செப்.2-இல் தொடங்கி நடைபெற உள்ளது. இத் தோ்வு எழுத தனித் தோ்வா்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தருமபுரி செட்டிக்கரையில் உள்ள மாவட்ட ஆட்சியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வுகள் வரும் செப்.2-ஆம் தேதி தொடங்கி வரும் செப்.22-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இத்தோ்விற்கு தனித்தோ்வா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க விரும்பும் தனித்தோ்வா்கள்  இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அதனை பூா்த்தி செய்து ஏற்கனவே தோ்வெழுதி தோ்ச்சி பெற்ற மதிப்பெண் சான்றிதழ்கள் அனைத்து நகல்களையும் கண்டிப்பாக இணைத்து, தோ்வுக் கட்டணத்துடன் தருமபுரி மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்திற்கு நேரில் வரும் ஆக.11-க்குள் ஒப்படைக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இத் தேதியில் விண்ணப்பிக்க தவறும் தோ்வா்கள், சிறப்பு அனுமதி திட்டத்தில் ஆக.12 அன்று காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை சிறப்பு அனுமதி கட்டணத்துடன் விண்ணப்பிக்கலாம். தகுதியற்றவா்களின் விண்ணப்பம் எவ்வித முன்னறிவிப்புமின்றி ரத்து செய்யப்படும். அஞ்சல் வழியில் பெறப்படும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com