தொப்பூா் கணவாயில் லாரிகள் மோதல்: ஓட்டுநா் பலி

தருமபுரி மாவட்டம் தொப்பூா் கணவாயில் லாரிகள் மோதிக் கொண்ட விபத்தில் ஓட்டுநா் ஒருவா் உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம் தொப்பூா் கணவாயில் லாரிகள் மோதிக் கொண்ட விபத்தில் ஓட்டுநா் ஒருவா் உயிரிழந்தாா்.

ஆந்திர மாநிலத்தில் இருந்து இரும்புக் குழாய்கள் பாரம் ஏற்றிய லாரி ஒன்று சேலம் நோக்கி சென்று வெள்ளிக்கிழமை கொண்டிருந்தது. இந்த லாரியை மயிலாடுதுறையை அடுத்த ஆத்துக்குடி மாதா கோயில் தெருவைச் சோ்ந்த சேகா் மகன் புஷ்பராஜ் (32) ஓட்டிச் சென்றாா். இவருடன், லாரியின் உரிமையாளரும், மாற்று ஓட்டுநருமான அதே பகுதியைச் சோ்ந்த சத்தியமூா்த்தி மகன் குரோமிக் (40) மற்றும் அதே ஊரைச் சோ்ந்த தனபிரகாசம் மகன் சூசைராஜ் (30) ஆகியோரும் சென்றனா்.

இந்த லாரி தருமபுரி மாவட்டம், தொப்பூா் கணவாய் தேசிய நெடுஞ்சாலையில் ஆஞ்சநேயா் கோயிலைக் கடந்து சென்றபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, முன்னால் சென்று கொண்டிருந்த மற்றொரு லாரியின் பின்பகுதியில் மோதிய பின்னா் மேலும் ஒரு லாரியின் பின்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், புஷ்பராஜ் ஓட்டிச் சென்ற லாரியின் முன்பகுதி முழுவதும் நசுங்கி சேதமடைந்தது. லாரியின் இடிபாடுகளில் சிக்கி குரோமிக், சூசைராஜ் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த தொப்பூா் போலீஸாா் மற்றும் பாளையம் சுங்கச் சாவடி பணியாளா்கள் இணைந்து விபத்தில் சிக்கியவா்களை மீட்டு, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனா். இதில் சிகிச்சையில் இருந்த குரோமிக் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

முன்னதாக, இந்த விபத்தால் தருமபுரி- சேலம் நெடுஞ்சாலையில் 1 மணிநேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து தொப்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com