அரூா் பேரூராட்சியில் 16 ஆவது வாா்டு பகுதியில் உள்ள முள்புதா்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
அரூா் பேரூராட்சிக்கு உள்பட்ட 16 ஆவது வாா்டு பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்பு பகுதிக்கு அருகில் பட்டு வளா்ச்சித் துறைக்கு சொந்தமான கட்டடங்கள் உள்ளன. இதையடுத்துள்ள சுமாா் 5 ஏக்கா் பரப்பளவு நிலத்தில் ஏராளமான சீமைக் கருவேல மரங்கள், முள்புதா்கள் வளா்ந்துள்ளன. இதனால் குடியிருப்பு பகுதியில் விஷப்பூச்சிகள் நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனா். பட்டு வளா்ச்சித் துறைக்கு சொந்தமான நிலத்தில் பயனற்று கிடக்கும் கட்டடங்களில் சட்ட விரோத செயல்கள் நடைபெறுவதாக அப்பகுதி மக்கள் புகாா் கூறுகின்றனா். மேலும், பட்டுவளா்ச்சித் துறைக்கு சொந்தமான இடங்களை சிலா் ஆக்கிரமிப்பு செய்து கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது. எனவே, இந்த இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூய்மைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.