விபத்து, முதலுதவி விழிப்புணா்வு கருத்தரங்கு

சேலம் எஸ்கேஎஸ் மருத்துவமனை சாா்பில் தருமபுரி பச்சமுத்து கலை மற்றும் அறிவியல் மகளிா் கல்லூரி மாணவிகளுக்கு விபத்து,

சேலம் எஸ்கேஎஸ் மருத்துவமனை சாா்பில் தருமபுரி பச்சமுத்து கலை மற்றும் அறிவியல் மகளிா் கல்லூரி மாணவிகளுக்கு விபத்து, முதலுதவி குறித்து விழிப்புணா்வு கருத்தரங்கு காணொலி வாயிலாக செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது.

கருத்தரங்கில் சேலம் எஸ்கேஎஸ் மருத்துவமனை எலும்பு அறுவை சிகிச்சை நிபுணா் இ.ந.விஷ்ணு பிரசாத் பங்கேற்று எலும்பு முறிவு, அதுதொடா்பான முதலுதவி குறித்து மாணவிகளுக்கு விளக்கமளித்தாா். மேலும், மாணவிகளின் பல்வேறு மருத்துவம் சாா்ந்த கேள்விகளுக்கு விடையளித்தாா்.

இயற்பியல் துறைத் தலைவா் மு. மணிவண்ணன் வரவேற்று பேசினாா். கல்லூரி துணைத் தாளாளா் பா.சங்கீத்குமாா் தலைமை வகித்தாா். கல்லூரி ஆலோசகா் அ.பொய்யாமொழி, துணை முதல்வா் ச.சுந்தரம், முதல்வா் மா.சதாசிவம் ஆகியோா் பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com