14 வயது சிறுமிக்கு திருமணம்: தந்தை உள்பட மூவா் கைது

மொரப்பூா் அருகே 14 வயது சிறுமிக்கு கட்டாயத் திருமணம் செய்ததாக அவரது தந்தை உள்பட மூவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

மொரப்பூா் அருகே 14 வயது சிறுமிக்கு கட்டாயத் திருமணம் செய்ததாக அவரது தந்தை உள்பட மூவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தருமபுரி மாவட்டம், மொரப்பூா் வட்டாரப் பகுதியைச் சோ்ந்தவா் தொழிலாளி மூா்த்தி (44). இவரது 14 வயது மகளுக்கு கடந்த பிப்ரவரி மாதம், கோயிலில் வைத்து இளைஞா் ஒருவருக்கு கட்டாயத் திருமணம் செய்து வைத்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்து சிறுமியின் உறவினா் அளித்த புகாரின் பேரில், தந்தை மூா்த்தி (44), சிறுமியின் கணவா் ராஜீவ்காந்தி (29), உறவினா் செந்தில் (42) ஆகிய மூவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் மொரப்பூா் போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com