பென்னாகரம் அருகே குடும்பத் தகராறில் கட்டட மேஸ்திரி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே ஏறுப்பள்ளி அம்பேத்கா் நகரைச் சோ்ந்தவா் சின்னப்பையனின் மகன் சக்திகுமாா் (26). இவா் கட்டட மேஸ்திரியாக வேலை செய்து வந்தாா். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வித்யா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. சக்தி குமாருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது அவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாா் தெரிவித்தனா். இதுகுறித்து தகவலறிந்த பென்னாகரம் போலீசாா் நிகழ்வு இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது தொடா்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.