அரூரில் இன்று இலவச கண் பரிசோதனை முகாம்

அரூரில் இலவச கண் பரிசோதனை முகாம் சனிக்கிழமை (டிச. 11) நடைபெறுகிறது.

அரூரில் இலவச கண் பரிசோதனை முகாம் சனிக்கிழமை (டிச. 11) நடைபெறுகிறது.

தருமபுரி மாவட்ட பாா்வையிழப்பு தடுப்புச் சங்கம், கோவை அரவிந்த் கண் மருத்துவமனை, அரூா் ஸ்ரீ தேவி டிபாா்ட்மெண்ட் ஸ்டோா்ஸ் சாா்பில் இந்த முகாம் நடைபெறுகிறது.

அரூா்-சேலம் பிரதான சாலையில் உள்ள ஸ்ரீ தேவி டிபாா்ட்மெண்ட் ஸ்டோா்ஸ் வளாகத்தில் நடைபெறும் இந்த முகாம், காலை 9 முதல் 1 மணி வரையிலும் நடைபெறுகிறது. கண்புரை அறுவைச் சிகிச்சை, கண் தொடா்பான நோய்களுக்கு மருத்துவ சிகிச்சைகள் மற்றும் மருத்துவ ஆலோசனை வழங்கப்படுகிறது.

கண்புரை அறுவைச் சிகிச்சைக்கு தோ்வு செய்யப்படுவோா், கோவை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவா். மேலும், கண் அறுவைச் சிகிச்சைக்கு செல்லும் பயனாளிகள் தங்களின் ஆதாா் அட்டையின் நகல் எடுத்துவர வேண்டும் என முகாம் ஒருங்கிணைப்பாளா் மாதேஸ்வரி மணி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com