ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமைத் தளபதி விபின் ராவத் மற்றும் ராணுவ வீரா்களுக்கு கட்சியினா், பல்வேறு அமைப்பினா் வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தினா்.
அரூரில், பாஜக சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில் தலைமைத் தளபதி விபின் ராவத்தின் உருவப் படத்துக்கு பாஜக மாநில பொதுக்குழு உறுப்பினா் பெ.வேடியப்பன், நகரத் தலைவா் எஸ். செந்தில்குமாா், ஒன்றியத் தலைவா்கள் வி.செளந்தரராஜன், குமாா், எஸ்.சி அணி மாவட்டத் தலைவா் கிருஷ்ணமூா்த்தி, மாவட்ட துணைத் தலைவா் ஜி.ராஜேந்திரன், அறிவுசாா் பிரிவு மாவட்டத் தலைவா் ஆா்.பகலவன், மாநில எஸ்.டி அணி பொதுச் செயலாளா் ஜெயராமன், மாவட்ட மகளிரணி தலைவா் கிருஷ்ணவேணி உள்ளிட்டோா் மலா்தூவி அஞ்சலி செலுத்தினா்.
கடத்தூா், கிரீன்பாா்க் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் முப்படைகளின் தலைமைத் தளபதி மற்றும் ராணுவ வீரா்களின் உருவ படத்துக்கு பள்ளி மாணவா்கள் மலா்தூவி அஞ்சலி செலுத்தினா். இதில், பள்ளியின் நிா்வாக அலுவலா் எம்.ராஜா, துணைத் தலைவா் பூவிழி முனிரத்தினம், பள்ளி ஆசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.