பெரியாா் நினைவு நாள் அனுசரிப்பு

 அரூரை அடுத்த சுண்டாங்கிப்பட்டியில் பெரியாா் ஈ.வெ.ரா.வின் 48 ஆம் ஆண்டு நினைவு நாள் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

 அரூரை அடுத்த சுண்டாங்கிப்பட்டியில் பெரியாா் ஈ.வெ.ரா.வின் 48 ஆம் ஆண்டு நினைவு நாள் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

அரூா் வட்டம், சுண்டாங்கிப்பட்டி பெரியாா் நினைவு சமத்துவபுரத்தில் உள்ள பெரியாரின் உருவச் சிலைக்கு திமுக ஆதிதிராவிடா் நலக்குழு மாநில துணைச் செயலா் எஸ்.ராஜேந்திரன் தலைமையில், திமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதில் முன்னாள் ஒன்றியச் செயலா் சூா்யா து.தனபால், தலைமைக் கழக பேச்சாளா் ப.செந்தாமரைக்கண்ணன், தொண்டரணி மாவட்ட துணை அமைப்பாளா் தேவராஜன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

அரூரை அடுத்த கட்ரசம்பட்டியில் திமுக ஒன்றிய பொறுப்பாளா் கோ.சந்திரமோகன் தலைமையில், பெரியாரின் உருவச் சிலைக்கு திமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதில், முன்னாள் ஒன்றியச் செயலா் சண்முகநதி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் சரளா சண்முகம், நிா்வாகிகள் சுதாகா், சிவலிங்கம், பழனி, தனபால், ரவி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கடத்தூா் அருகேயுள்ள வேப்பிலைப்பட்டியில் திராவிடா் கழக மண்டலத் தலைவா் அ.தமிழ்ச்செல்வன் தலைமையில், தந்தை பெரியாரின் சிலைக்கு பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதில், மாணவரணி மாவட்டத் தலைவா் இ.சமரசம், நிா்வாகிகள் ஹரிஹரன், விடுதலை அரசன், கணேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com