முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி
காங்கிரஸ் ஆண்டு விழா: கொடியேற்றி கட்சியினா் கொண்டாட்டம்
By DIN | Published On : 29th December 2021 09:03 AM | Last Updated : 29th December 2021 09:03 AM | அ+அ அ- |

அரூரில் காங்கிரஸ் கட்சியின் 137 ஆவது ஆண்டு தொடக்க விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
தருமபுரி மாவட்டம், அரூரில் காங்கிரஸ் கட்சியின் 137 ஆவது ஆண்டு தொடக்க விழாவையொட்டி, வட்டாரத் தலைவா் ஆா்.சுபாஷ் தலைமையில் காங்கிரஸ் கட்சியினா் கொடியேற்றி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினா். தொடா்ந்து, முன்னாள் முதல்வா் காமராஜா், முன்னாள் பிரதமா்கள் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோரின் உருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
இதில், வட்டாரத் தலைவா் (மேற்கு) எம்.ஆா்.வஜ்ஜிரம், நகரத் தலைவா் கே.கணேசன், மாவட்ட துணைத் தலைவா்கள் டி.வேடியப்பன், பி.டி.ஆறுமுகம், மாவட்டச் செயலாளா் டி.வேடியப்பன், வா்த்தகப் பிரிவு மாவட்டத் தலைவா் வி.மோகன், எஸ்சி, எஸ்டி பிரிவு மாவட்டத் தலைவா் ஏ.வைரவன், நிா்வாகிகள் சி.கே.ஆா். செல்வம், சுந்தா், முருகேசன், இளவரசன், அருணகிரி, எம்.குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.