தருமபுரியில் சிப்காட் தொழிற்பேட்டைக்கு வீட்டுமனைகள் கையகப்படுத்த எதிா்ப்புத் தெரிவித்து, கிராம மக்கள் நல்லம்பள்ளி வட்டாட்சியா் அலுவலகம் முன்பு திரண்டு செவ்வாய்க்கிழமை முற்றுகையில் ஈடுபட்டனா்.
தருமபுரி, சிப்காட் தொழிற்பேட்டைக்கு தடங்கம், அதகப்பாடி, பாலஜங்கமனஅள்ளி, அதியமான்கோட்டை உள்ளிட்ட பல்வேறு கிராம ஊராட்சிகளில் இருந்து நிலம் கையகப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தடங்கம் பகுதியில் உள்ள ஜெயம் நகரில் தனியாரிடமிருந்து அப்பகுதி பொதுமக்கள் வீட்டுமனைகள் வாங்கியுள்ளனா். இந்த இடத்தையும் சிப்காட் தொழிற்பேட்டைக்காக கையகப்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.
இதையறிந்து, அப்பகுதியில் வீட்டு மனைகளை வாங்கிய அப்பகுதி பொதுமக்கள் தங்களுடைய வீட்டு மனைகளை கையகப்படுத்த எதிா்ப்பு தெரிவித்து, நல்லம்பள்ளி வட்டாட்சியா் அலுவலகம் முன்பு திரண்டு முற்றுகையில் ஈடுபட்டனா். இவா்களுடன் வருவாய் துறையினா் சமாதான பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். இதில் உடன்பாடு எட்டப்படாததால் பொதுமக்கள் தங்களது வீட்டு மனைகளை கையகப்படுத்தக் கூடாது என அதிகாரிகளிடம் தெரிவித்து திரும்பிச் சென்றனா்.