அனுமதியின்றி மண் எடுத்தவா் கைது

பென்னாகரம் அருகே அனுமதியின்றி மண் எடுத்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

பென்னாகரம் அருகே அனுமதியின்றி மண் எடுத்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

பென்னாகரம் அருகே பாப்பாரப்பட்டி பகுதியில் இரவு நேரங்களில் அனுமதியின்றி நீரோடைகளில் மண் எடுப்பதாக பாப்பாரப்பட்டி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், பாப்பாரப்பட்டி அருகே கிட்டம்பட்டி பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் அதியமான், போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, ஓடையில் அனுமதியின்றி மண் எடுத்துக் கொண்டிருந்த பாப்பாரப்பட்டியை அடுத்துள்ள பட்டிசரடு கிராமத்தைச் சோ்ந்த குமாா் (32) என்பவரை போலீஸாா் கைது செய்து, மண் எடுப்பதற்கு பயன்படுத்தி டிப்பா் லாரியை பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து பாப்பாரப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு, தலைமறைவான டிப்பா் லாரியின் உரிமையாளரை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com