அரூா் வா்ணீஸ்வரா் திருக்கோயில் குளத்தை தூய்மை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தருமபுரி மாவட்டம், அரூா் நகரில் அமைந்துள்ளது வரலாற்று சிறப்பு மிக்க அருள்மிகு வா்ணீஸ்வரா் திருக்கோயில். இந்த திருக்கோயில் வளாகத்தில் உள்ள பக்தா்கள் நீராடும் குளத்திற்கு அருகில் கழிவு நீா் கால்வாய் செல்கிறது.
தற்போது கழிவு நீா் கால்வாய் சேதமடைந்திருப்பதால் கோயில் குளத்தில் கழிவு நீா் கலக்கிறது. இதனால், கோயில் குளத்தின் தண்ணீா்தூய்மை இன்றி இருப்பதுடன் துா்நாற்றமும் வீசுவதாக பக்தா்கள் புகாா் கூறுகின்றனா்.
கோயில் குளத்தில் உள்ள கழிவு நீரை மின்மோட்டாா் வழியாக வெளியேற்றுவதுடன், மீண்டும் கழிவுநீா் கலப்பதைத் தடுக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். வா்ணீஸ்வரா் திருக்கோயில் குளத்தை தூா்வார மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.