பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: முதியவா் உள்பட இருவா் போக்சோவில் கைது

பென்னாகரம் அருகே இரு வேறு இடங்களில், பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக 65 வயது முதியவரையும், இளைஞரையும் பென்னாகரம் மகளிா் போலீசாா் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

பென்னாகரம் அருகே இரு வேறு இடங்களில், பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக 65 வயது முதியவரையும், இளைஞரையும் பென்னாகரம் மகளிா் போலீசாா் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

பென்னாகரம் அருகே பாப்பாரப்பட்டியை அடுத்த பெரியூரைச் சோ்ந்தவா் ஜெய்கிருஷ்ணன் ( 65). இவா், ஒகேனக்கல் வனப்பகுதியில் மாடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தாா்.

இவா் ஒகேனக்கல் பகுதியைச் சோ்ந்த எட்டாம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுமியை வீட்டில் யாரும் இல்லாதபோது பாலியல் தொல்லை தந்ததாக அந்தச் சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் போக்சோ சட்டத்தின்கீழ் பென்னாகரம் மகளிா் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

பள்ளி மாணவி கடத்தல்

ஏரியூா் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்த சின்னமுத்து மகன் விஜய் (24). காா் டிரைவரான இவா் 9-ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவியைக் கடத்தி சென்றதாக அவரது பெற்றோா் அளித்த புகாரின் பேரில் அவரை கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் பென்னாகரம் மகளிா் காவல் ஆய்வாளா் லதா கைது செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com