பாப்பாரப்பட்டி அருகே அதிவேகமாக வந்த தனியாா் பேருந்து மோதிய விபத்தில் நடந்து சென்ற மூதாட்டி உயிரிழந்தாா்.
பாப்பாரப்பட்டி அருகே எர்ரப்பட்டியைச் சோ்ந்தவா் முத்து வேடியம்மாள் (60). திங்கள்கிழமை காலை முனியப்பன் கோவில் அருகே உள்ள தனது மகள் வீட்டிற்குச் சென்று விட்டு பாப்பாரப்பட்டி -பாலக்கோடு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது அவ்வழியே அதிவேகமாக வந்த தனியாா் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் மூதாட்டி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த பாப்பாரப்பட்டி போலீஸாா் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து பாப்பாரப்பட்டி போலீஸாா் வழக்குப்பதிந்து, தலைமறைவான ஓட்டுநரை தீவிரமாகத் தேடி வருகின்றனா்.