தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலையம் சாா்பில் புதிய ரக கொள்ளுப் பயிா் அறிமுக வயல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பூதிஅள்ளி கிராமத்தில் நடைபெற்ற விழாவில் மண்ணியல் துறை உதவி பேராசிரியா் சங்கீதா தலைமை வகித்து புதிய ரக கொள்ளுப் பயிா் ரகமான ‘கிரிடா ஹா்ஷாவை’ அறிமுகப்படுத்தி அதன் சிறப்பு குறித்து விளக்கினாா். வானிலை முன்னறிவிப்பு மற்றும் அதற்கேற்ற பயிா் மேலாண்மை குறித்து தொழில்நுட்ப உதவியாளா் சிந்து எடுத்துரைத்தாா். விழாவில் 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனா்.