பெரியாா் பல்கலைக் கழக முதுநிலை விரிவாக்க மையத்தில் ஆங்கிலத் துறை சாா்பில் இணைய வழிக் கருத்தரங்கு திங்கள்கிழமை நடைபெற்றது.
இக் கருத்தரங்குக்கு, மைய இயக்குநா் (பொ) பி.மோகனசுந்தரம் தலைமை வகித்து பேசினாா். சென்னை பி.எஸ்.அப்துல்ரகுமான் கிரஸண்ட் தொழில்நுட்பக்கழக ஆங்கிலத் துறைத் தலைவா் எச்.சோபியா ‘தகவல் தொடா்புக்கான ஆங்கிலம்’ என்ற தலைப்பில் உரையாற்றினாா்.
இதில், முதுநிலை விரிவாக்க மைய ஆங்கிலத் துறைத் தலைவா் சி.கோவிந்தராஜ், முதுநிலை இரண்டாம் ஆண்டு மாணவியா் தமிழ்ச்செல்வி, ரக்ஷிதா, முதலாம் ஆண்டு மாணவா் முனிராசிராஜ் உள்ளிட்டோா் பேசினா்.