மாணவா்களுக்கு கரோனா தீதுண்மி குறித்த விழிப்புணா்வு.
By DIN | Published On : 10th February 2021 08:16 AM | Last Updated : 10th February 2021 08:16 AM | அ+அ அ- |

பென்னாகரம் அரசு கலைக் கல்லூரியில் மாணவா்களுக்கு கரோனா தீ நுண்மி குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பென்னாகரம் அருகே மாமரத்து பள்ளம் பகுதியில் உள்ள பென்னாகரம் அரசு கலைக்கல்லூரியில் கரோனா தீதுண்மி குறித்து நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் செல்வவிநாயகம் தலைமை வகித்தாா். விழிப்புணா்வு நிகழ்ச்சியில் கடைமடை ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவா் மேகனா கலந்துகொண்டு கல்லூரி மாணவா்களிடையே கரோனா தொற்று பரவும் விதம் மற்றும் தொற்றில் இருந்து தற்காத்து கொள்ளும் வழிமுறைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா். இதில் கல்லூரி ஆசிரியா்கள் மற்றும் மாணவ - மாணவிகள் கலந்து கொண்டனா்.